காதலினாற் சாகாமல் இருத்தல் கூடும்; கவலை போம், அதனாலே மரணம் பொய்யாம் – ஐ லவ் யூ கதையின் கருவை எனக்குத் தந்தவன் பாரதி.
முக்கோணக் காதல் அரதப் பழசு. அதில் போட்டி, பொறாமை, வஞ்சம், துன்பம் எல்லாம் கூட்டணி அமைத்துக்கொண்டு நம்மை அழவைக்கும். அந்தக் கூட்டணியின் துணையில்லாமல், காதலின் தீவிரத்தால் மட்டுமே உங்களை அழ வைக்கவேண்டும் என்று நான் தீட்டிய சதித் திட்டத்தில் விளைந்ததுதான் 88 லவ் யூ.
இருபது வயதேயான பேரழகி, அபிநயா. அதே வயதில் இருக்கும் அழகிய ஆண்மகன் அஸ்வின், நாற்பது வயதான கோடீஸ்வரி மாதங்கி. இந்த மூன்று தண்டவாளங்களில் அன்பென்னும் சொர்க்கத்தை நோக்கிப் பயணிக்கும் காதல் எக்ஸ்ப்ரஸ்தான் ஐ லவ் யூ.
காதல் முற்றிய நிலையில் ஆன்மிகமாகி விடுகிறது. ஆன்மிகம் முற்றினால் காதலாகி விடுகிறது. இந்த இனிய முரணை விளக்கும் முயற்சிதான் ஐ லவ் யூ.
Be the first to review “ஐ லவ் யூ”