திருப்பதி லட்டு (திருமலையின் சுவாரஸ்யங்கள்)

180.00

திருப்பதி லட்டு சிறப்புகள் மட்டுமல்ல…
உண்டியலில் பணம் குவியும் ரகசியம்…
சுப்ரபாதம் எப்படி வந்தது?

Add to Wishlist
Add to Wishlist

ஏழுமலையான் கோவில் பற்றி ஏராளமான செய்திகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால்ல, இதுவரை அறியாத தகவல்களின் தொகுப்பாய் மிளிர்ந்திருக்கிறது இந்த இனிய நுõல். திருப்பதி லட்டை சுவைத்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால், அதை தயாரிக்கும் முறை, தினமும் எவ்வளவு பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது, எவ்வளவு லட்டு விற்கிறது…இன்னும் பல அரிய தகவல்கள் நுõலில் கொட்டிக் கிடக்கின்றன. லட்டின் இனிமை ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஏழுமலையான் செய்த அற்புதங்கள் இந்த நுõலில் ஏராளமாக இருக்கிறது. திருப்பதியில் தினமும் குவியும் கோடிகளை, எண்ண வேண்டும், அதைக் கண்ணால் காண வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமானால், நீங்களே அதில் பங்கேற்க முடியும். ஆனால், அதற்கான விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டுமே! அந்த நடைமுறை குறித்த விளக்கம் நுõலில் இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் உண்டியலில், இவ்வளவு பணம் சேரும் ரகசியம் என்ன தெரியுமா? இதற்கான விடை இந்த நுõலில் இருக்கிறது.

நமக்கெல்லாம் லட்டு தரும் ஏழுமலையான், தினமும் சாப்பிடுவது என்ன தெரியுமா? அதிலும் ஒரு சாதாரண பாத்திரத்தில்…திருப்பதியில் தினமும் காலையில் சுப்ரபாதம் கேட்கும். ஆனால், ஒரே ஒரு மாதம் மட்டும் கேட்காது. காரணம் என்ன? அப்படியானால், அந்த மாதத்தில் வேறு என்ன பாடி, வேங்கடவனை எழுப்புவார்கள்…இப்படி பலப்பல அதிசய தகவல்கள் இந்த நுõலில் உள்ளது. அனுபவமிக்க பத்திரிகையாளர் பி. சுவாமிநாதன், இந்த நுõலை எளிய நடையில் எழுதியுள்ளார். இனி, ஏழுமலையானை தரிசிக்க செல்லும் முன், இந்நுõலை படித்து விட்டு சென்றால், திருப்பதியில் மேலும் பல அதிசயங்களைக் கண்டு வர இயலும்.

…..

தி.செல்லப்பா

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருப்பதி லட்டு (திருமலையின் சுவாரஸ்யங்கள்)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன