வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில், நமக்கு ஏற்படும் அனுபவங்கள், நம்மை வழி நடத்தும் ஆசிரியர்களாகவும் ஒரு சில சமயங்களில் அமைந்து விடுகின்றன.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள, ‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’, ‘முருகப்பெருமான்’. ‘குல தெய்வ வழிபாடு’, ‘ஆதாரத் தலங்கள்’, சனாதன தர்மத்தின் கருத்துக்கள்’, ‘எழுமையும் ஏமாப்புடைத்து’, ‘உயிரும் உடலும்’, ‘அன்பே சிவம்’ என்னும் கட்டுரைகள் சமய, ஆன்மீகக் கருத்துக்களை இக்கால மாந்தர் மனத்தில் நினைவூட்டுவன. அதிலும் குறிப்பாக சனாதன தர்மம் தொடர்பான கட்டுரை அருமையிலும் அருமை.
நூல் கட்டுரையாகவும், கதைகளைப் படிப்பது போன்ற மொழிநடையாகவும் எழிலுடன் திகழ்கிறது.
நூலில் 21 கட்டுரை மணிகள் கோக்கப்பெற்று ஒளி வீசுகின்றன. தனி மனித, சமூக நலன்களை மேம்படுத்தவல்ல செய்திகளைத் தாங்கியுள்ளன. கருத்துச் சுதந்திரம் சமூக அக்கறையோடும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். எளிமை நம்மை சுதந்திரமாக வாழ வைக்கும். ஆடம்பரம் நம்மை அடிமையாக்கவே முயலும்.
தமது வாழ்வை உரியவாறு வாழ்ந்து, சரியான சமயத்தில் பொறுப்புக்களை அடுத்தத் தலைமுறையினருக்குப் பகிர்ந்தளித்து, மகிழ்ச்சியுடன் வாழத் தெரிந்தவர்களே உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாவர்.
சுசர்ல வெங்கடரமணி எழுதியுள்ள இந்த “எண்ணச் சிறகுகள்” நூலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் மிகவும் புதுமையானவை; ஏனென்றால் அவை அனைத்துமே உண்மைச் சம்பவங்கள். உண்மை எப்பொழுதும் புதுமையானதுதானே. கற்பனைக் கலப்பில்லாமல் நடந்ததை நடந்தவாறு எழுதியிருக்கிறார். நூலாசிரியர் தாம் வாழ்வில் கண்டறிந்த அனுபவ நிகழ்வுகளைச் சுவைபட, ஆதாரச் சான்றுகளுடன் எழுதி, நூலை உயிர் உள்ளது ஆக்கியுள்ளார்.
– இளங்கோவன்
Weight | 0.250 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “எண்ணச் சிறகுகள்”