முப்பது வயதில் தன்னைப் பெற்றவர்களையும் வளர்த்தவர்களையும் இழந்து, ஆசை ஆசையாகச் செய்து கொண்ட திருமணமும் முறிந்து போய், செயலிழந்து நிற்கும் அழகான தணிக்கையாளன் சிவா. அன்பான வார்த்தைகளாலேயே பலரின் மன நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் பெற்ற மன நல ஆலோசகி ஸ்ருதி. சிவாவிற்கும் ஸ்ருதிக்கும் இடையே தோன்றும் உறவை வார்த்தைகளில் வடிக்கத் தவியாய்த் தவித்தேன். இந்த நூலைப் படிக்கும்போது அழுவீர்கள், சிலிர்ப்பீர்கள், சிந்திப்பீர்கள். சில சமயம் சிரிக்கவும் செய்வீர்கள். அப்போதுதான் நான் தவித்த தவிப்பு உங்களுக்குப் புரியும். அந்தப் புரிதலில் உங்கள் மனம் உருகும்போது நீங்கள் இறைவனிடம் நெருங்கிவிட்டதை உணர்வீர்கள்.
காதலை விடவும் வலியதொரு தோழமையால் காயம்பட்ட இரு இதயங்கள் ஒன்றுக்கொன்று புகலிடமாகி நிற்கும் உரைநடைக் கவிதை.
– சுமித்ரா தேவி










Be the first to review “தேடி உனைச் சரணடைந்தேன்”