காஞ்சி பல்லவர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. பல்லவ ஆட்சியாளர்கள் கற்றலுக்கு சிறந்த புரவலர்களாக இருந்தனர். காஞ்சியின் கோயில்களுடன், கட்டிகா என்று அழைக்கப்படும் கற்றல் மையங்களை இணைத்து வேதங்கள் மற்றும் வேத நூல்களின் மூலம் உயர் கல்வியை வழங்கினர்.
பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தனது ஆட்சிக் காலத்தில் காஞ்சியைத் தலைநகராக்கினான். காஞ்சி அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று வளர்ந்தது. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு காஞ்சி பல்லவர்களின் தலைநகராக இருந்தது.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில், காஞ்சி இரண்டாம் நிலை தலைநகராகத் தொடர்ந்தது. சோழர்கள் காஞ்சியை தன்வசம் வைத்திருப்பதிலும், அதை பல கோயில்களால் அலங்கரிப்பதிலும் பெருமை கொண்டனர்.
காஞ்சி 2,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்நாட்டின் செழுமையான கலை மற்றும் வரலாற்றுச் சுவடுகளை உள்ளடக்கிய சான்றாக திகழ்கிறது.
காஞ்சிபுரம் கோயில்களின் செழுமையான பாரம்பரியத்தை அங்கீகரித்து, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்துக்கு தகுதியானது என்று கருதி தற்காலிகமாக பட்டியலிடப்பட்டு உள்ளது. அந்த நியமனத்தின் கீழ் 11 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அக்கோயில்களின் தெய்வீகச் சிறப்புகளும், தமிழர்களின் புராதாணக் கட்டிடக்கலையின் மாண்பு பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| Weight | 0.250 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.









Be the first to review “நகரேஷு காஞ்சி”