முனைவர் வைகைச்செல்வன்
பத்தாயிரம் இலக்கிய மேடைகள், இலட்சக்கணக்கான அரசியல் மேடைகள் என தமிழகத்தின் மூச்சுக்காற்றில் நிரம்பியுள்ளது இவரது பேச்சுத்தமிழ். ‘சொல்லின் செல்வர் விருது’, ‘திருவள்ளுவர் விருது’, ‘கலைமாமணி விருது’ போன்ற விருதுகளை தமிழக அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை தேர்தலில் நின்றவர், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், அரசு தலைமைக் கொறடாவாகவும், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் இலக்கிய மேடைகளில் இவரின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை வானொலியில் தினந்தோறும்
ஒலிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வெற்றி பெறுவதற்கு இடை இடையே தடைகற்கள் வரத்தான் செய்யும், அதனையே படிக்கற்களாக மாற்றி வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இந்நூலில் பல்வேறு உதாரணங்களுடன் ‘வெற்றியின் ரகசியங்களை’ நமக்குப் பகிர்ந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.
Be the first to review “நல்லதே நடக்கும்”