அர்த்தமுள்ள ஆன்மீகம்

பி.சுவாமிநாதன்

420.00

நோய் இல்லாமல் வாழ்வது எப்படி?
உங்கள் வாழ்வில் ஜோதிடம் பலிக்குமா?
பாடாய் படுத்த தயாராகும் சனிபகவான்!

Add to Wishlist
Add to Wishlist

மனிதர்களுக்கு எவ்வளவோ காசு பணம் இருக்கலாம். ஆனால், நிம்மதி…கிலோ எவ்வளவு என்று கேட்கும் நிலையில் தான் இருக்கிறது. குடும்பம், அலுவலகம், வெளியிடம், உலகம் என்று எங்கு பார்த்தாலும் சண்டை சச்சரவு….ஏன் இந்த நிலை? நமது தேசத்தின் முதுகெலும்பே ஆன்மிகம் தான் என்பார் சுவாமி விவேகானந்தர். அந்த எலும்பு இன்று முறிந்து போயிருக்கிறது. ஆன்மிகம் பற்றிய தெள்ளத்தெளிவான அறிவு இருக்குமானால், சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை. இந்த உலகம் அமைதிப்பூங்காவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அந்த அறிவை ஊட்டுவதே இந்த நுõலின் நோக்கம்.

நோய் வந்து விட்டதா…கவலை வேண்டாம். நாராயணீயம் இருக்கிறது. அதிலுள்ள ஒரு ஸ்லோகமே உடலுக்கு நிம்மதியைக் கொடுத்து விடும். காசிக்குப் போகாமலே சொர்க்கம் செல்ல ஆசையா…அதற்கும் வழி காட்டுகிறார் ஒரு மகான். ஜோதிடம் பார்த்தால் நமது பிரச்னையெல்லாம் தீர்ந்து விடுமா…விடை இருக்கிறது இந்த நுõலில். கிரகங்கள் தான் என் துன்பத்துக்கு காரணம் என்று புலம்புகிறீர்களா! அப்படியெல்லாம் இல்லை…ஒவ்வொரு கிரகமும் நன்மை செய்யவே இருக்கிறது.  குறிப்பாக, சனி பகவான் தரும் துன்பத்தைக் கடந்து, கிரகங்கள் தரும் நன்மையை எப்படி நாம் அடைவது என்பதற்கு பதில் உள்ளது இந்த புத்தகத்தில்.

நமது வில்லிப்புத்துõர் ஆண்டாள் போல, கேரளத்தில் ஒரு ஆண்டாள் இருந்திருக்கிறாள்…திருடர்களுக்கு <உதவி செய்தாராம் ஒரு ராம பக்தர்…நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்த சுவையான தகவல்…இப்படி வித்தியாசமான செய்திகளும் இந்த நுõலில் உண்டு.

புத்தக ஆசிரியர் பி.சுவாமிநாதன், அனுபவமிக்க பத்திரிகையாளர், பேச்சாளர் என்பதால், எழுத்து நடை இனிமையாக இருக்கிறது. வாசித்து மகிழுங்கள்…வாழ்க்கையைப் பேணுங்கள்.

….

தி.செல்லப்பா

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அர்த்தமுள்ள ஆன்மீகம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன