ஓய்வு பெற்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி, அவர் படித்த நூல்களிலிருந்து அவருக்குப் பிடித்த ஆன்மிக கருத்துக்களைத் தொகுத்து அத்துடன் அவரது சிந்தனைகளையும் சேர்த்து ‘அறிவியல் ஆன்மிக சிந்தனைகள்’ – ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பார்வையில் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். வேத புராணங்கள், இதிகாசஙகள் பற்றிய விளக்கங்கள், திருமாலின் பத்து அவதாரஙகள, சிவபெருமானின் முழு முதன்மை முதலிய ஆன்மிகச் செய்திகள் இதில் நன்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் அறிவியல் துறையினர் ஆன்மிகச் செய்திகளை அறிந்துக் கொள்வதற்கும், ஆன்மிக அன்பர்கள் அறிவியல் விளக்கங்களை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் வழிவகுப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆன்மிக வரலாறு தொடங்கி 21-ம் நூற்றாண்டு மகான்கள் வரை தொகுத்திருப்பது பாராட்டிற்குரியது. இந்நூல் ஆன்மீக உலகிற்கு மற்றொரு மாணிக்கமாய் வெளியாகி பக்தி மணம் பரப்பும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
– இளங்கோவன்
Be the first to review “அறிவியல் ஆன்மீக சிந்தனைகள்”