இந்து சமய வாழ்வியல் சனாதன தர்மம்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

230.00

ஹிந்து என்ற பெயருக்கும் சனாதனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து காஞ்சிப் பெரியவர் கூறுவதென்ன

Add to Wishlist
Add to Wishlist

உலகில் பிற சமயங்கள் உருவான பின்னர் சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே ஹிந்து என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். சமயம் என்பதற்கு ‘சமைப்பது’ என பொருள். அதாவது பக்குவப்படுத்துதல். மனிதன் தன்னிடம் உள்ள விலங்கு குணங்களை கைவிட்டு பக்குவமாகி அன்புவழியில் வாழ்வதற்கான வழிகாட்டுதலே சனாதன தர்மம். வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டால் அழகு மட்டுமல்ல எறும்புக்கும் உணவாகும் என்று அனைத்து உயிர்களையும் நேசிக்கச் சொல்வது சனாதனம்.
சனாதனம் வெறும் சடங்கு முறை அல்ல. அதுவே வாழ்வுக்கான வழிமுறை.
சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல், கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல், கருவிகளுக்கு நன்றி சொல்லும் ஆயுதபூஜை என நன்றி சொல்வதையே உயிர் மூச்சாக கொண்டது சனாதனம்.
சனாதனம் என்பது வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. வாழ்வியல் முறையைச் சொல்கிறது.
சனாதன தர்மத்தின் உயிர் மூச்சே சத்தியம் தான். நம் நாட்டின் அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம் ‘சத்யமேவ ஜயதே’ அதாவது வாய்மையே வெல்லும்.
சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை ஒரே மாதிரியாகப் பார்ப்பதுடன் அனைவரையும் கடவுளாகப் பார்ப்பது என்பது அதன் அடிநாதம்.
சனாதனம் தொன்று தொட்டு காலமாக சமயத்தையும் மக்கள் சேவையையும் பிரித்துப் பார்த்ததே கிடையாது.
இன்று பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது சனாதனம். சனாதனம் என்றால் என்னவென்றே அறியாமல் வெறுமனே அந்த வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு பலரும் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சனாதனம் என்றால் என்னவென்று தெளிவாக எளிய நடையில் விரிவாக விளக்கி இருக்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இலக்கிய மேகம் ந.ஸ்ரீநிவாஸன். இந்துக்கள் மட்டுமல்ல, அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய புத்தகம் இது.
– இளங்கோவன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்து சமய வாழ்வியல் சனாதன தர்மம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன