படிப்பிலே ஏற்படுகின்ற அழுத்தம், எதிர்காலத்தை பற்றிய சிந்தனை, எதிர்கால வேலைவாய்ப்பு போன்ற அச்சம் போன்றவையே ரத்த அழுத்தம் ஏற்பட காரணம்.
25 வயதிலிருந்து 50 வயது இருப்பவர்கள் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் இதய நோய்கள் முதல் கண் பார்வை கோளாறு வரை ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தினால் மார்பு வலியும் மாரடைப்பும், இருதயமும் அதன் தசைகளுக்கு சிதைவு அல்லது அழிவு ஏற்பட்டு, இருதய செயல் இழப்பு ஏற்படுகிறது.
60 வயதுக்கு மேல் குறிப்பாக 80 வயதுக்கு மேல் ரத்த அழுத்தத்தில் தாக்கமும் மரணமும், விதமும் அதிகமாகிக்கொண்டே போகிறது.
ஆண்களைப்போல் பெண்களுக்கு 40 வயது கடந்தவர்கள், 50 வயது 60 வயது மேல் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் என்பது சாதாரணமாக காணப்படுகிறது.
குழந்தையின் சிறுநீரக இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் ரத்த அழுத்தம் வரலாம். உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் இதய நோய்கள் முதல் கண் பார்வை கோளாறு வரை ஏற்படுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க, காலையில் எலுமிச்சை சாரும் சிறிது இஞ்சி தேனும் கலந்து சாப்பிடலாம். வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும், நல்ல உணவை உண்ண வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், அதிகமான மதுவை அருந்த வேண்டாம். புகையை தவிர்க்க வேண்டும்.
இந்த புத்தகத்தில் இதுபோன்று கைக்குழந்தைகள், இளவயதினர், கருவுற்ற பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் டாக்டர் எஸ் அர்த்தனாரி அவருடைய நீண்ட கால அனுபவ அடிப்படையில் எழுதியுள்ள இந்த புத்தகம் மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
– இளங்கோவன்
உயர் ரத்த அழுத்ததினால் வரும் திடீர் மரணம், தடுக்கும் முறைகள்
டாக்டர் எஸ். அர்த்தநாரி₹170.00
உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன வழி? ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை என்ன?
Weight | 0.200 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “உயர் ரத்த அழுத்ததினால் வரும் திடீர் மரணம், தடுக்கும் முறைகள்”