இந்திரா செளந்தர் ராஜன் எழுதியுள்ள குற்றம் குற்றமே நாவல் ஒரு மாறுபட்ட முயற்சி. ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ஒருவர் இத்தகைய கிரைம் நாவலைப் படைத்திருப்பது புதுமைதான். பொதுவாக ஒரு திருட்டோ, கொலையோ, பேராசை மற்றும் சுயநலம், குரூர புத்தி இவைகளால்தான் நடக்கும். ஒரு மர்மக் கதை என்றாலே குற்றவாளி தவறு செய்வான். கதாநாயகன் அதை தடுக்கவும், அவனை மடக்கவும் போராடுவான். கதாநாயகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால் இந்த கதையில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் குற்றவாளிக்குத் தரப்பட்டுள்ளது. கதையின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை அவன் கதாநாயகனுடன் பயணிக்கிறான். இன்னும் சொல்லப்போனால் அவன்தான் கதை நகரவே காரணமாக திகழ்கிறான். கதாநாயகனின் அறிமுகமும் அவன் பணியில் சேரும் விதமும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. கதை முழுக்க எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும் இறுதியில் ஏற்படும் திருப்பம் வாசகர்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது; அதேபோல்தான் கதையின் முடிவும். மாறுபட்ட அணுகு முறை, ஆனால் திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதையின் நகர்வு என்று விறுவிறுப்பாக செல்கிறது. மர்மக் கதையாக இருந்தால் அதனை வாசகர்கள் யூகிக்க இயலாதபடி கொண்டு செல்ல வேண்டும். யதார்த்தத்தையும் விட்டுவிடக்கூடாது.
மற்றபடி இதுதான் கதை என்று ஒருவரியில சொன்னாலும் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் போய் விடும். எனவே புத்தகத்தை வாசித்து மகிழுங்கள்.
– இளங்கோவன்
குற்றம் குற்றமே!
இந்திரா சௌந்தரராஜன்₹320.00
கதாநாயகனுக்கு இணையாக வில்லனும் பயணிக்கும் புதுமையான படைப்பு
Weight | 0.300 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “குற்றம் குற்றமே!”