கன்னியாகுமரி கோவில்களிலேயே பெரியது, கலை அம்சம்மிக்கது, வரலாற்றுச் சிறப்புமிக்கது சுசீந்திரம் தாணுமாலயன் கோவில். இக்கோவிலின் ஆலய வரலாறுகள் கூறும் நூல்களுள் இந்நூல் ஒரு புதிய பரிமாணமாக உள்ளது. கல்வெட்டியல், வரலாற்றியல் ஆதாரங்களின் பின்னணியில், சமூக வரலாற்றியல், நாட்டார் வழகாற்றியல் தரவுகளை உரிய இடங்களில் மிக யதார்த்தமாகப் பின்னித் தொடுத்த அழகிய படைப்பு இது. கோயில் மரபு சார்ந்த ஐதீகங்களையும், புராண வழக்காறுகளையும், வழிபாட்டு மரபுகளையும் இணைத்துத் தரவும் தவறவில்லை. இக்கோயில் மற்றும் ஊர் சார்ந்த செய்திகள், தேவதாசியர், வயிராவிகள், மகா சபை, மூல பரடை சபை, யோகக்காரர், தற்கால அறங்காவலர் அமைப்பு வரை அலசப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்புலம், வழக்காறு, விடுதலைப் போரட்ட நிகழ்வு எனப் பலவாகப் பரவி கிடக்கிறது.
Be the first to review “தாணுமாலயன் ஆலயம் (சுசீந்திரம் கோவில் வரலாறு)”