திரும்பிப் பார்க்கிறேன்–2 ரஜத் எழுதியிருக்கும் பல முக்கியமான பேட்டிகளின் தொகுப்பு. இதுவரை பெரும்பாலோர் அறியாத சுவையான பல தகவல்களும் இதில் உள்ளன. அவற்றில் சில:
* ஒரு விபத்தில் நெருப்பில் பாதி முகம் எரிந்த ஒரு நபரை சிவாஜி பார்க்க நேரிட்டது. அதை நினைவில் கொண்டு தெய்வமகன் பட கேரக்டருக்கு மேக்-அப் போடுவதில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தினார்.
* ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு உள்ள ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குநர், ஸ்ரீதர்.
* கே.பாலச்சந்தரின் படைப்பைப் பொறுத்தவரை, கதாபாத்திரங்களின் வழியேதான் கதை நகரும். அவரது கதாபாத்திரங்கள் கற்பனை, யதார்த்தம், புதுமை என்ற மூன்று வகையிலும் இருக்கும்.
* மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மாடலாக இருந்த ஓவியர் ராமு.
* டெல்லி செஷன்ஸ் கோர்ட்டில் முதன் முறையாக ஒரு ‘பெட்’ போட்டு அதில் படுத்தவாறு கோர்ட்டில் ( சஞ்சய் காந்தி) இருந்தேன் இது ஒரு ரிகார்டு’
* நான் ( எம்.எஸ்.விஸ்வநாதன்) போட்ட இசை அவருக்கு (எம்.ஜி.ஆர்.) ஒ.கே., என்றதும் நேரில் வந்து பாராட்ட வேண்டும் என்றால், அது மற்றொரு கலைஞனை நேரில் சென்று பாராட்ட வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.
* ‘நான் (ஜெயலலிதா) சீதையோ, திரவுபதியோ அல்ல. ஒரு சாதாரண பெண். என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, உள்ளதை உள்ளபடி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படித்துவிட்டு, என்னை பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள்…’
வாசகர்களுக்கு இது போன்ற தகவல்களுடன் ரஜத் எழுதியுள்ள இந்த புத்தகம் நல்ல ட்ரீட்டாக அமையும்.
– இளங்கோவன்
Weight | 0.250 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “திரும்பி பார்க்கிறேன் பாகம் 2”