நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் ஆகிய இரு நூல்கள் உ.வே.சா. அவர்கள் தமது இளமைக் காலந் தொடங்கி தாம் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைக் கட்டுரையாக சுதேச மித்திரன், ஆனந்தவிகடன், தீபாவளி மலர், தினமணி பாரதியார் மலர், கலை மகள் ஆகிய இதழ்களில் எழுதி வெளிவந்தவை. நான் கண்டதும் கேட்டதும் எனும் தொகுப்பில் பன்னிரண்டு கட்டுரைகளும் புதியதும் பழையதும் எனும் தொகுப்பில் இருபது கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
உடையார்பாளையம் சமஸ்தான வித்துவான் சங்கராபரணம் நரசையர். அந்த இராகத்தை அடகு வைத்ததனால் வெளியே பாட இயலாமல் இருந்தும் மகாராஜா யுவரங்கபூபதி அடகை நிவர்த்தி செய்து அந்த ராகத்தைப் பாடச் சொல்லக் கேட்டதும் நில புலம், வீடு, நகை போல இசையும் அடகுப் பொருளாகப் இருந்ததை சங்கராபரணம் நரசையர் கட்டுரை விவரிக்கிறது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தமிழ்ப் பண்பாட்டுத் தகவல்களாக இருக்கின்றன.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்”