ராமாயணத்தில் அறியாத பக்கங்கள்

பிரபு சங்கர்

350.00

இதுவரை கேள்விப்படாத ராமாயணச் சம்பவங்கள்…. அட இப்படியும் கூட ராமாயணக் கதை இருக்கிறதா என்று வியக்க வைக்கும் கதாபாத்திரங்கள்…

Add to Wishlist
Add to Wishlist

ராமாயணம் உலகறிந்த ஒரு நிகழ்வு; அதில் புதைந்திருக்கும், இதுவரை மற்றவர்கள் எவரும் அறிந்திராத அல்லது கவனிக்கத் தவறிய சி நிகழ்வுகளை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் பிரபு சங்கர். கம்பராமாயணம்‌ படித்த பலரும்‌ தம்‌ கவனத்தில்‌ இருத்திக்‌ கொள்ளத்‌ தவறிய சில கதாபாத்திரங்களைப்‌ பற்றி எழுத விரும்பியதன்‌ விளைவே இப்புத்தகம்‌.
ராமாவதாரத்திற்கு காரணமான புத்ர காமகோஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்கர்‌, சீதையைக் கரம்பிடித்த ராமன், தம்பதி சமேதராக முதலில் கைகேயிடம் வணங்கி ஆசி பெற்றபோது பொறாமைப்படாத கோசலையின் பெருந்தன்மை, சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை, ராவணன் வதத்திற்கு ஆதி காரணமான ஜனகன்‌, தன் ஊனத்தை எள்ளி நகையாடுவதைச் சகித்துக் கொள்ள முடியாத‌ மந்தரை, பரிதாபத்துக்கு உரிய சுமந்திரன்‌, பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய தசரதனின் தந்திரம், அயோத்தி மக்களபை் போக்குக் காட்டி ஏமாற்றிய‌ ராமன், பரதனின் வருகையால் சினம் கொண்ட குகன், மும்மூர்த்திகளின் அன்னையான‌ அனசூயை, ராமனால் சாபவிமோசனம் பெற்ற கபந்தன்‌‌, சுக்ரீவனை அடையும் வழியைச் சொன்ன சபரி, ‘சீதையை ராவணன் அபகரிக்கும்’ சம்பவத்துக்கு ஒத்திகை நடத்திய விராதன்‌, லட்சுமணன் மீது காமம் கொண்ட அயோமுகி, தசரத நட்புக்கு மெருகூட்ட விரும்பிய ஜடாயு, ராவணனுடன் ஒப்பந்தம் போட்ட வாலி, இலங்கை நகருக்குப் புதுப்பொலிவு கொடுத்த‌ விஸ்வகர்மா, மூன்றே நாட்களில் சேதுவை மேடிருத்தி (ராமர்) பாலம் அமைத்த நளன்‌‌, ராவணனிடம் ராமனின் தூதனாகச் சென்ற அங்கதன்‌‌, ராவணனுக்குப் புத்திமதி கூறிய மாலியவான்‌‌, ‘அன்பினால் தாயினும் இனியவள்’ என்று சீதை மகிழ்த்தக்கவளாக ஆன திரிசடை‌ மற்றும் சம்புமாலி, இந்திரஜித்‌, கும்பகர்ணன்‌, மாதலி மண்டோதரி என பல கதாபாத்திரங்கள் குறித்த சுவையான, பலரும் அறியாத தகவல்கள் இதில் நிரம்பியுள்ளன. ராமாயணத்தை புதுமையான கோணத்தில் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்பதில் ஐயமில்லை.
– இளங்கோவன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ராமாயணத்தில் அறியாத பக்கங்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன