சமூக வலைதளத்தில் வீடியோக்களை ரசித்துப் பார்க்கும் நமக்கு, கதைப் புத்தகங்கள் வினோதமாக இருக்கிறது. அதை மாற்ற ஒரு முயற்சிதான் லோகேஷ் மீராவின் இந்த சிறுகதை தொகுப்பு.
தமிழ் இலக்கியம் கடல் போன்றது. அதிலும் இளையோருக்கான கதைகள் பவளப்பாறையைப் போல. அரிதானது. உங்களைப் போன்ற இளையோருக்கு கவனம் குவியும் நேரம் (attention span) மிகக்குறைவு. அதனைக் கருத்தில் கொண்டு, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் படித்து முடிக்கக்கூடிய 20 சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.
இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் தினமும் சந்திப்பவைதான், இதில் வரும் கதாபாத்திரங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களாக, ஏன் நீங்களாகவேக் கூட இருக்கலாம்? வாசித்துப் பார்த்து அவற்றைக் கண்டுபிடியுங்கள்.
Be the first to review “வைரவழி”