திருமாலின் 108 திவ்ய தேசங்களில் உலகில் உள்ளவை 106. இந்தியா முழுவதும் இந்தத் திருத்தலங்கள் பரவிக் கிடந்தாலும், தமிழகத்தில் தான் 86 இருக்கின்றன என்பது நமக்குப் பெருமை. பெருமாள் கொடுத்த பெரிய வரம் இது. அவற்றையும் மாவட்ட வாரியாகப் பிரித்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 15 தலங்கள். மற்ற மாவட்டங்களை விட, இங்கு தான் திவ்யதேசங்கள் அதிகம். இந்த 15 தலங்கள் குறித்தும் அலசி ஆராய்ந்து, பாசுரங்கள், விளக்கம், செல்லும் வழி, தொலைபேசி எண், இன்னும் சகல வசதிகளையும்…சொல்லப்போனால், இனிக்கும் பலாவை எடுத்து அதையும் தேனில் தோய்த்து தந்துள்ளார் ஆசிரியர் பிரபுசங்கர். நீங்கள் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பார்த்த ஹிரண்ய வதம் வேறு, இங்கே ஆசிரியர் சொல்லும் வதம் வேறு. ஆகா…எவ்வளவு வித்தியாசம்…நரசிம்மனின் மடியில், படுத்திருந்த ஹிரண்யன், மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தானாம். தன் குடலை மாலையாக அவர் அணிந்த போது, ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டானாம். வித்தியாசமான இந்த வர்ணனையை காலம் முழுக்க மறக்க மாட்டீர்கள்.
முனிவர் ஒருவர் மேகத்திலேயே வாழ்ந்தார். யார் அவர்? மேகத்தை இருப்பிடமாகக் கொண்ட இவருக்கு பெருமாள் எப்படி அருள்புரிந்தார். காரகம் வரலாறு, மனதைப் பரவசத்தில் ஆழ்த்தி கலக்குகிறது. இப்போதெல்லாம், பெண்களின் தலையலங்காரத்துக்கென்றே நிறைய செலவழிக்கிறார்கள். நம் சீதாப்பிராட்டி, அந்தக் காலத்திலேயே இதற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறாள். அழகிய தலையல்ஙகாரத்துடன் கூடிய சீதையின் இந்த விக்ரகம் எங்கிருக்கிறது? நுõலைப் புரட்டினால் விடை கிடைக்கும். இன்னும் ஏராளமான புத்தம் புது தகவல்களுடன், 108 திவ்யதேசத்தின் காஞ்சி தரிசனம் களிப்படையச் செய்கிறது.
….
தி.செல்லப்பா
108 திவ்யதேச தரிசனம் பாகம் 3
பிரபு சங்கர்₹250.00
வீட்டில் இருந்தவாறே காஞ்சி திவ்யதேசங்களை
முழுமையாக அறியலாம், தரிசிக்கலாம்
Weight | 0.300 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “108 திவ்யதேச தரிசனம் பாகம் 3”