Krishnas Kiss Part-1

வரலொட்டி ரெங்கசாமி

500.00

“Bhagavad Gita as a love letter from God”

Add to Wishlist
Add to Wishlist

“Krishna’s Kiss-1″ என்ற தலைப்பில் வரலொட்டி ரெங்கசாமி எழுதியுள்ள இந்த நூல் ஆழமான ஆன்மீகக் கருத்துகளை எளிய நடையில் பகிர்கிறது. ஒரு அனுபவப் பகிர்வு போல தொடங்கி, பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை வாழ்வின் முன்னேற்றம், அன்பு மற்றும் கடமை ஆகியவற்றின் நோக்கில் விளக்குகிறது. இதில் உள்ள சில ஆன்மிக முத்துக்கள்:
” நீ மிகவும் பாவம் செய்தவனாக இருந்தாலும் கூட அன்பினால் மட்டுமே எல்லா தீமைகளையும் கடந்து செல்ல முடியும்”; “பகவத் கீதை குலத்தொழிலை ஆதரிக்கிறது என சிலர் கூறுவர்; ஆனால் அதில் கூறப்பட்டிருப்பதோ, “உன் திறமை எதுவோ அதில் கவனம் செலுத்து; மற்றவற்றைத் தேர்ந்தெடுத்தால் அது உனக்கும் சமுதாயத்திற்கும் பயன் தராது. நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். ஏனென்றால் அது உங்கள் இயல்பு. தயவு செய்து உங்கள் இயல்பிற்கு எதிராக செல்லாதீர்கள். நீங்கள் அப்படி எதிராக செய்தாலும் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது”; “ஆன்மாவிற்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஒரு நபர் பழைய ஆடைகளை களைந்து புதிய ஆடைகளை அணிவது போல்,
ஆன்மா பழையவற்றை நிராகரித்து புதிய உடல்களை அலங்கரிக்கிறது.” “ஒரு நாளைக்கு இத்தனை முறை, இந்த முறையில் நீங்கள் என்னை வணங்காவிட்டால் நான் உன்னை நேசிக்க மாட்டேன்” என்று கிருஷ்ண பரமாத்மா ஒருபோதும் சொல்லவில்லை.” “கீதை என்பது பத்துக் கட்டளைகள் அல்ல. அவர் அப்படிச் செய்திருந்தால் உலகம் கண்டிராத மிகப் பெரிய ஆசிரியராக அவரை வணங்கியிருக்க மாட்டோம்.”
“வேறு சிந்தனையோ, அக்கறையோ இல்லாமல் என்னை நேசிப்பவர்களுக்கு, அவர்களுக்கு இல்லாததை நான் சுமந்துகொண்டு, அவர்களிடம் இருப்பதைப் பாதுகாக்கிறேன்.” “விரதம் இருந்தோ, அங்க பிரதட்சணம் செய்தோ நம்மைத் துன்புறுத்திக் கொள்வவதை இறைவன் விரும்பவில்லை”; “உங்கள் அடிப்படை இயல்புக்கு ஏற்ப ஒரு தொழிலைத் தேர்ந்தெடுங்கள்.”
கீதையின் சுலோகங்களுக்கு விளக்கம் கொடுக்க உதாரணங்கள், நடந்த சம்பவங்கள், குறிப்பாக அன்பு என்றால் என்ன என்று விளக்க சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜாச்சார்யா, புத்தர், ஜலாலுதீன், பயாஜிட், செயின்ட் பிரான்சிஸ், அபிராமிபட்டர், டி.எம்.சவுந்திரராஜன் ஆகியோரின் அனுபவங்கள், பிற மத நூல்களிலிருந்து மேற்கோள்கள், கற்பனை சம்பவங்கள் குறிப்பாக ராமராக கிருஷ்ணரை உருவகப்படுத்தல் என பல யுக்திகளை ஆசிரியர் கையாண்டுள்ளது மிகச் சிறப்பாக உள்ளது. மொழியின் நடை, கதை சொல்லும் நடை எளிமையானது, ஆனால் அதே சமயத்தில் ஆழமான தத்துவ சிந்தனைகளைக் கொண்டுள்ளது.
இவ்விதமான நூல்கள் ஆன்மீக மற்றும் தத்துவத்தில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புதுமையான பார்வையையும் அடிக்கடி புதுப்பிக்கும் ஆழ்ந்த சிந்தனையையும் அளிக்கக்கூடியவை. இது உங்கள் ஆர்வத்திற்கேற்ப பயனுள்ளதாக இருக்கும்!
– இளங்கோவன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “Krishnas Kiss Part-1”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன