பகவத் கீதை என்றதும் நமது நினைவுக்கு வருவது, “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே” என்பதுதான்; ஆனால் பகவத் கீதையில் கூறப்படவில்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “உங்களுக்கு விருப்பப்பட்ட செயலைச் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு; ஆனால் அந்த செயலுக்கான பலன்களை எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை; உங்களுடைய செயல்களின் முடிவுகளுக்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று கருதாதீர்கள்; அதற்காக எப்போதும் நீங்கள் விருப்பப்பட்டதைச் செய்யாமல் இருக்க வேண்டாம்”. இதைத் தெளிவாக Krishna’s Kiss 2 என்ற இந்த ஆங்கில நூலில் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் விளக்கம் கொடுத்துள்ள கிருஷ்ணரின் கீதோபதேசத்தின் சில முக்கிய அம்சங்கள்: ” தங்கத்திற்கு பதிலாக நான் அன்பைத் தேடுகிறேன்; அன்புக்காக ஏங்குகிறேன். எனக்காக என்னை நேசிக்கும் நபர்களுக்காக நான் ஏங்குகிறேன்”; ” உலகில் அரண்மனை மற்றும் குடிசை, தங்கம் மற்றும் பித்தளை, ராஜா மற்றும் காவலாளி, பண்டிதர் மற்றும் முட்டாள், பணக்காரர்கள் மற்றும் ஏழை, பூசாரி மற்றும் வேட்டைக்காரன், யானை மற்றும் நாய் எல்லாமே எனக்கு ஒன்றுதான்”; ” நம் துன்பங்கள், இன்பங்கள் அனைத்தும் ஒன்றே. துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவுவதை விட முக்கியமானது வேறொன்றுமில்லை”; “கடவுளை நேசிப்பது அனைவரையும் நேசிப்பது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” ” யோகாவில் உறுதியாக இரு. உங்கள் கடமையைச் செய்துவிட்டு, வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல் இருக்கும் மன சமநிலையே யோகா என்று அழைக்கப்படுகிறது”; ” நல்லவர்களைக் காப்பாற்றவும், தீயவர்களை அழிக்கவும், நீதியை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் வருவேன்”.
இத்தகைய விளக்கங்களையும் சுவையான உதாரணங்கள், சுவாரசியமான கதைகள் (சத்தியபாமா, ருக்மணி; லைலா, மஜ்னு), திரைப்படக் காட்சிகள், கலீல் ஜிப்ரான், ஜென், ஸ்வாமி சின்மயானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுஃபி மிஸ்டிக் ஜலாலுதீன் ரூமி, பரமாச்சார்ய ஸ்வாமிகள், ஆண்டாள், திருவள்ளுவர், பாரதியார், நாராயண குரு ஆகியோரின் மேற்கோள்கள், பகவத் கீதைக்கு கிருஷ்ரின் முத்தம் என பெயர் வைத்ததேன் என்ற விளக்கம் ஆகியவற்றுடன் படைத்திருப்பது இந்த நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
– இளங்கோவன்
Authors | |
---|---|
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “Krishnas Kiss Part-2”